Advertisement
dhanushசினிமா

செல்வராகவன் தனுஷ் கூட்டனியில் ‘நானே வருவேன்’ | first look and shooting spot photos

செல்வராகவன் இயக்குனராகவும் தனது தம்பி தனுஷை கதாநாயகனாகவும் 2002 ல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கும் மக்களுக்கும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய நான்கு படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளிவந்துள்ளது. இந்நான்கு படங்களிலும் தனுஷை வெவ்வேரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் செல்வராகவன்!

இவர்கள் கூட்டணியை கொண்டாடுவதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. கடைசியாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ‘மயக்கம் என்ன’ திரைப்படம் கடந்த 2011 ல் வெளியானது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்தார். இப்படத்தில் தனுஷ் ‘கார்த்திக்’ என்ற கதாப்பாத்திரத்தில் wild life photographer ஆகவும், படத்தின் கதாநாயகியான ரிச்சா கங்கோபத்யா ‘யாமினி’ என்ற கதாப்பாத்திரத்தில் குடும்ப தலைவியாகவே வாழ்ந்திருப்பார்கள்!

Advertisement

இப்படம் வெளிவந்து 10 வருடம் ஆயினும் இந்த இரு கதாப்பாத்திரத்தை இதுவரை யாரும் மறக்கவும் இல்லை அதே நேரத்தில் ரசிக்கவும் தவிர்க்கவில்லை. அந்த அளவிற்கு மக்கள் மனதில் கதையை பதிய வைத்தது செல்வராகவனின் படைப்பு! இதனால் மீண்டும் எப்போது தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணையும் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.

யாரும் எதிர்பார்க்காத ஆச்சர்யத்தை ரசிகர்களுக்கு அறிவித்த செல்வராகவன்

கடந்த 2010 – ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் சோழர் கதையை மைய்யமாகக் கொண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இப்படம் வெளியாகி தோழ்வியை தான் சந்தித்தது!

ஆனால் எப்போதும் செல்வராகவன் படம் என்றாலே வெளியாகி 10 வருடத்திற்கு பின்பு தான் அப்படத்தை பெரும் அளவில் பேசப்படும் என்பது உண்மை. ஆயிரத்தில் ஒருவன் படமும் இதே போன்று தான் அமைந்தது. படம் வெளிவந்த போது ஒதுக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 3 வருடமாக பெரும் அளவில் பேசப்பட்டும் இப்படத்தை வெளிவந்த போதே வரவேற்க்கவில்லையயே என வருத்தம் தெரிவித்தும் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க தவறாதீர்கள் வரவேற்க்க நாங்க ரெடி! என செல்வராகவனிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2024 – ஆம் ஆண்டில் வெளியாகும் என அறிவித்தது மட்டுமல்லாமல் இப்படத்தின் கதாநாயகன் தனுஷ் என குறிப்பிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார் செல்வராகவன்.

இன்னும் 4 வருடம் இவர்கள் கூட்டணிக்காக காத்திருக்க வேண்டுமே என வருத்தம் தெரிவித்த ரசிகர்களுக்கு, V கிரியேஷன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் விரைவில் வருகிறோம் என்று செல்வராகவன் – தனுஷ் -ன் மற்றொரு படத்தின் அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 13 – ஆம் தேதியன்று First look போஸ்டருடன் வெளியிட்டிருந்தார். ஏற்கனவே படத்தின் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 – ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் உற்சாகத்தோடு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த தகவலை ரசிகர்கள் பெரிதும் பகிர்ந்து வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.