IPL2021 மீண்டும் தொடங்குவதை உறுதிபடுத்திய BCCI: உற்சாகத்தில் ரசிகர்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்பதை பிசிசிஐ உறுதிபடுத்தி உள்ளது

இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை முடிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சனிக்கிழமை அறிவித்தது.

இன்று நடைபெற்று முடிந்த சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை 2021 ஐ நடத்துவதற்கு ஐ.சி.சி யிடமிருந்து கால அவகாசம் கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு பி.சி.சி.ஐ. கெளரவ செயலாளர் பி.சி.சி.ஐ. ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Exit mobile version