WTC: 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது BCCI | மயங்க் அகர்வால், அக்சர் படேலுக்கு இடமில்லை

சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 ல் தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து வெளியேற வேண்டிய வீரர்கள்: ஆக்சர் படேல், கே.எல்.ராகுல், ஷார்துல் தாக்கூர், மாயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர்.

விராட் கோலி அணியை வழிநடத்துவார், அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக இருப்பார்.

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், விருத்திமான் சஹா

Photo Credit: @BCCI

இந்த அணியில் ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், இரண்டு ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

Exit mobile version