தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஜூலை 31 க்குப் பிறகு மட்டுமே சேர்க்கை தொடங்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூலை 31 க்குப் பின்னர்தான் தமிழ்நாட்டின் அனைத்து கல்லூரிகளும் சேர்க்கைகளைத் தொடங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே பொன்முடி திங்களன்று தெரிவித்தார்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் திங்கள்கிழமை கல்லூரி சேர்க்கை குறித்து முதலமைச்சர் எம் கே ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியம் ஜூலை 31 ஆம் தேதிக்கு முன் மதிப்பீட்டு அளவுகோலின் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை அறிவிப்பதாக அறிவித்துள்ளன.

“சேர்க்கைகளை வழங்குவதற்காக மாணவர்களை தரவரிசைப்படுத்த கல்லூரிகள் சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியம் பன்னிரெண்டாம் மதிப்பெண்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு வாரியங்களும் ஜூலை 31 க்கு முன்னர் மதிப்பெண்களை இறுதி செய்யும். எனவே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஜுலை 31 க்கு பிறகே சேர்க்கை தொடங்க வேண்டும்”என்று அமைச்சர் கூறினார்.

“சில தனியார் கல்லூரிகள் சேர்க்கைகளைத் தொடங்கியுள்ளன என்பதை நாங்கள் அறிந்தோம். பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே கல்லூரி சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். ஆகவே, கல்லூரி சேர்க்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும். எந்தவொரு கல்லூரியும் இப்போது சேர்க்கைகளைத் தொடங்கினால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், “என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை கடந்த வாரம் தொடங்கியது.

முன்னதாக மாநில அரசு அறிவித்த மதிப்பீட்டு முறையின்படி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் 50%, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் 20% கொண்டிருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பு உள் மதிப்பீடு மற்றும் நடைமுறைத் தேர்வுகளுக்கு 30% வழங்கப்படும்.

Read also: 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை | 10, 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களும் எடுத்துக் கொள்ளப்படும்

Exit mobile version